பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி யூ டியூப்பில் வீடியோ பதிவேற்றம் செய்ததாகவும், பப்ஜி மூலம் பண மோசடியில் செய்ததாகவும் புகார் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து பப்ஜி மதனை போலீசார் தேடி வந்த நிலையில், போலீசார் கடந்த ஜூன் மாதம் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை கைது செய்தனர்.
பின்னர், பப்ஜி மதன்மனைவி கிருத்திகாவிற்கு மட்டும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டு தற்போது புழல் சிறையில் உள்ளார். அவர்கள் மீதான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புழல் சிறையில் பப்ஜி மதனுக்கு சிறப்பு சலுகை வழங்கியதாக சிறை மருத்துவர் நவீன் மானாமதுரைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பப்ஜி மதன் சிறைக்குள் சொகுசு வாழ்க்கை வாழ சிறைக்காவலர் ஒருவர் மதன் மனைவி கிருத்திகாவிடம் பேரம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…