தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.அதன்படி,காஞ்சிபுரத்தில் செங்காடு கிராமத்தில் நடைபெறும் சிறப்பு கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.
அதே சமயம்,ஒன்றரை ஆண்டுகளாக நடத்தப்படாமல்இருந்த நிலையில்,தற்போது நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி மற்றும் வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதித்து உறுதிமொழி எடுக்க மக்களை ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.மேலும்,சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டதற்கான விவரங்களை மத்திய அரசின் இணையதளத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பதிவேற்றுமாறு ஊரக வளர்ச்சித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதனிடையே,இனி வருடத்திற்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நாட்கள் மட்டுமல்லாது மார்ச் 22, நவம்பர் 1 ஆகிய நாட்களிலும் என 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என கடந்த இரு தினங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…