தமிழ்நாடு

தீபாவளி பண்டிகை – இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

Published by
லீனா

வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை  கொண்டாடப்பட உள்ள நிலையில், மக்கள் தங்களது சொந்த ஊருக்கு வெளியூருக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, இன்று முதல் 3 நாட்களுக்கு 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,575 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து 10,975 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து 5,920 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ள நிலையில், கோயம்பேட்டில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் 11 ஆம் தேதி வரை ஆம்னி பேருந்துகளின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அதன்படி, வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படாது என்றும், நசரத்பேட்டை வழியாக வண்டலூர், கிளாம்பாக்கம் வெளிவட்டச் சாலை வழியே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் ஆம்னி பேருந்து சங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Published by
லீனா

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

23 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

2 hours ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

2 hours ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago