தாராபுரம் அருகே சூரியநல்லூரில் சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணி வாகனங்கள் விபத்துக்குள்ளானது.
தமிழகத்தில் தேர்தலுக்கு நடைபெற சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினர் அனைத்து தொகுதிகளிலும் மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரித்து வருகின்றனர். இதற்கிடையில், பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்பட பலர் தமிழகத்தில் பிரசாரம் செய்தனர்.
இன்று பிரதமர் மோடி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தருகிறார். தாராப்புரத்தில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரச்சாரம் செய்யவுள்ளார். இந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில், தாராபுரம் அருகே சூரியநல்லூரில் சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணி வாகனங்கள் விபத்துக்குள்ளானது. விபத்தில் 3 கார்கள் சேதம் அடைந்த நிலையில் 2 ஓட்டுனர்களுக்கு காயம் ஏற்பட்டது.
தாராபுரம் பிரச்சாரத்திற்கு வந்த முதல்வர் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற போது விழுந்து நடந்தது. சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணி இருவருமே காரில் இல்லாததால் தப்பினர். முதலமைச்சர் காரில் அமைச்சர் வேலுமணி சென்றதால் இந்த விபத்து இருந்து அமைச்சர் தப்பினார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…