வரும் தேர்தலில் 40 தொகுதிகளில் 40-ஐ வெல்வோம்.! முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.!

Default Image

வரும் தேர்தல் 40க்கு 40ம் ஜெயிப்போம். அதே போல வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிக்கும் அதிகமாக ஜெயிப்போம் என முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியிருந்தார். 

கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பேசினார். அப்போது, திமுக அரசின் திட்டங்களை விமர்சித்து பேசியிருந்தார்.

மேலும், ‘ காவல்துறையினர் அடிமை போல இருக்காதீங்க. மிஞ்சி போனால் டிரான்ஸ்பர் செய்வாங்க. எங்க ஆட்சியில் காவல்துறையினர் காவல்துறையினராகவே இருந்தார்கள். இந்த சூழ்நிலை மாறும். எப்போது தேர்தல் வைத்தாலும் அதிமுக தான் ஜெயிக்கும்.

காவல்துறையினர் நியாயமாக நடந்து கொள்ளுங்கள். கண்டிப்பாக கட்சி திருப்பி கொடுக்கும். ஒழுங்கான சாலை அமையுங்கள். அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 நாங்கள் தான். அதே போல சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிக்கும் மேலே ஜெயித்து எடப்படியார் முதல்வராக வருவார். என அந்த கூட்டத்தில் பேசியிருந்தார் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்