ஒட்டுமொத்த தமிழ் மாநிலத்தையே சில தினங்களாக நிலைகுலைய வைய்த்த சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. கடந்த பல ஆண்டுகளாக சுமார் 250 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர் சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பல்.
இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட திருநாவுக்கரசு, வசந்தகுமார், சபரி ராஜன் மற்றும் சதீஷ் ஆகியோர் இம்மாதம் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்த குற்றவாளிகளின் பின்னணியில் பல அரசியல் பிரபலங்கள் இருப்பதால் காவல்துறை விசாரணை போக்கு சரியில்லை என குற்றங்கள் சாட்டப்பட்டனர்.
மேலும் இவர்களின் பின்னணியில் பல ஆளுங்கட்சி நபர்களும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் டிஜிபி ராஜேந்திரன் வழக்கை சிபிசிஐடிக்கு விரைவில் மாற்றப்படும் எனவும் கூறினார்.
இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி வழங்க வேண்டும் என ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கருப்புக் கொடி கட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக, போராட்டம் பெரிதளவில் சென்று விட கூடாதென பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரிகள் மாணவர்களுக்கு சிறப்பு விடுமுறையை அளித்தது. ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் பாதிக்கபட்ட பேட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க போராடிவந்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் கல்லூரி மாணவர் ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார் எஸ் பி செல்வராஜ். தற்போது அடிபட்ட மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…