மே 16-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் ! 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Default Image

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளது.ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது, மே16ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் 48மணி நேரத்திற்கு  நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பு உள்ளது.

குமரிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவை ஒட்டியுள்ள பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு இப்பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம்  என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live 20032025
ADMK
GoodBadUgly
digital scams old women
DMK MPs protest at Delhi Parliament
cm mk stalin
impact player rule in ipl