வங்கக் கடலில் நிலை புரேவிபுயல் இன்று காலை 11 மணி அளவில் வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது பாம்பனில் இருந்து கிழக்கே சுமார் 40 கிலோ மீட்டர் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து கிழக்கு வடகிழக்கில் சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது இன்று மதியம் பாம்பன் பகுதியை கடந்து பின்னர் மேற்கு -தென்-மேற்கு திசையில் தென் தமிழக கடற்கரையை ஒட்டி நகர்ந்து நாளை அதிகாலை பாம்பன் -கன்னியாகுமரியை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புரேவி புயல் காரணமாக இன்று வண்டி எண் 02693 சென்னை எழும்பூர் – தூத்துக்குடி சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 06236 மைசூர்- தூத்துக்குடி சிறப்பு ரயில்கள் மதுரை வரை இயக்கப்படும்.
மேலும், நாளை வண்டி எண் 02694 தூத்துக்குடி – சென்னை மற்றும் வண்டி எண் 06235 தூத்துக்குடி – மைசூர் ஆகிய சிறப்பு ரயில்கள் தூத்துக்குடி , மதுரை ரயில் நிலையங்களுக் கிடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்கள் மதுரையில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…