தலையை மொட்டை அடித்து முடியை விற்று பெற்ற பிள்ளைகளின் பசியை போக்கிய அன்புள்ளம் கொண்ட அம்மா.. மனதை நெகிழவைக்கும் சம்பவம்..

Published by
Kaliraj
  • பெற்ற பிள்ளைகளின் பசியை போக்க தலையை மொட்டை அடித்த தாய்.
  • மனதை நெகிழவைக்கும் சம்பவம்.

சேலம் மாவட்டம்  அம்மாபேட்டை பகுதியை  சேர்ந்தவர் செல்வம் வயது  37. இவரது மனைவியின் பெயர்  பிரேமா வயது 31. இந்த தம்பதிக்கு  மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள், வீமனுார் பகுதியில்,கடந்த  2015ம் ஆண்டு  செங்கல் சூளையில் பணியாற்றினர்.பின்  நண்பர் ஒருவரின் ஆலோசனையின் படி  கடன் வாங்கி, செங்கல் சூளை வைத்து,அதில் பெரும்  நஷ்டம் அடைந்தனர். இதன் காரணமாக அடந்த  கடன் தொல்லையால், ஏழு மாதங்களுக்கு முன், செல்வம் தீக்குளித்து தற்கொலை செய்தார்.

Image result for பசி

இவர்களுக்கு  உறவினர்கள் உட்பட யாரும் உதவ முன் வரவில்லை. இவரது மனைவி பிரேமா,அருகில் உள்ள  செங்கல் சூளை ஒன்றில், கூலி வேலைக்கு சென்று வருகிறார்.ஏற்கனவே  கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள்,தற்போது  பணம் கேட்டு தொந்தரவு செய்வதால், மனம் உடைந்த  பிரேமா கடந்த வாரம், தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப்பட்டு உள்ளார். இந்நிலையில், தனது மூன்று குழந்தைகள் பசியால் துடித்ததால், தன் தலையை மொட்டை அடித்து, அந்த முடியை விற்பனை செய்து, தனது குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார். இந்த தாயுள்ளம் குறித்து அறிந்த, அதே பகுதியைச் சேர்ந்த பாலா என்ற இளைஞர் இந்த உன்னத தாயான  பிரேமாவை சந்தித்து,அவருக்கும் அவரது குழந்தைகளுக்கும்  உணவுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த மனதை உருகவைக்கும் சம்பவம் குறித்து அந்த இளைஞர்  கூறியதாவது, சமூக வளைதளமான ‘பேஸ்புக்’கில், இந்த தாயுள்ளம் கொண்ட பிரேமாவின் நிலை குறித்து பதிவிட்டோம். இதை அறிந்த கருணை உள்ளம் கொண்ட பலரின் உதவியால், 1 லட்சம் ரூபாய் வரை நிதி கிடைத்துள்ளது. இந்த நிதியை வைத்து, முதலில், கடன்காரர்களின் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்திவிட்டு அவரின் மூன்று குழந்தைகளின் படிப்புக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம் என்று  அவர் கூறினார். இதற்கிடையில், பிரேமாவுக்கு தொல்லை கொடுத்து வரும், கந்து வட்டி கும்பல் குறித்து, காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
Kaliraj

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

59 mins ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

1 hour ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago