செங்கல்பட்டில் தாய் ஆலயம்மா சொத்தை பிரித்து கொடுக்க முடியாது என கூறியதால், தன் தாயின் கழுத்து, கை ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு மகன் பூபதி தப்பியோடிவிட்டார்.
சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட வண்டலூர் பகுதியில் வசித்து வருபவர் ஆலயம்மாள். 70 வயதான இந்த மூதாட்டிக்கு நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளார்.
இதில் மூத்த மகனான பூபதி என்பவர் வெகுநாட்களாக தாயிடம் தனது சொத்தின் பங்கை எடுத்து தரச்சொல்லி தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தரச்சொல்லி பூபதி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தாய் ஆலயம்மா சொத்தை பிரித்து கொடுக்க முடியாது என கூறியுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து தான் வைத்திருந்த கத்தியால் தாயின் கழுத்து, கை ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு பூபதி தப்பியோடிவிட்டார்.
அவர்கள் வீட்டிலேயே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் பூபதி தனது தாயை கத்தியால் குத்திய காட்சி பதிவாகியுள்ளது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் பூபதியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…