உசிலம்பட்டி:சின்னவெள்ளை மனைவி வீரம்மாள் இவர் மதுரை மாவட்டம் எழுமலை அருகேயுள்ள மல்லப்புரத்தைச் சேர்ந்தவர்.இவர் கணவர் இறந்து விட்டதால் தனி வீட்டில் வசித்து வந்தார். 2 மகன்கள் இவருக்கு உள்ளனர். இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இரண்டாவது மகன் தங்கச்சாமி அண்மைக்காலமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், “நீ மூத்த மகனுக்குத்தான் எல்லாம் செய்கிறாய்” எனக்கூறி தாய் வீரம்மாளிடம் தங்கச்சாமி தகராறு செய்துள்ளார்.இந்த சமயத்தில் நேற்று மதியம் வீட்டின் வெளியே உட்கார்ந்திருந்த வீரம்மாளின் தலையில் தங்கச்சாமி திடீரென கல்லைத்தூக்கிப் போட்டார். இதில் வீரம்மாள் அந்த இடத்திலேயே இறந்து போனார். இது குறித்து எம்.கல்லுப்பட்டி போலீசார் தங்கச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…