திருமணம் செய்து வைக்காததால் தந்தையை கொன்ற மகன் கைது!

தென்காசியில் திருமணம் செய்து வைக்காததால் தந்தையை கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள ஊத்தன்குளம் பகுதியை சேர்ந்த 70 வயது மாடப்பன் என்பவருக்கு 33 வயது மகன் ஒருவர் உள்ளார். அவருக்கு 33 வயது ஆகியும் அவர் வேலைக்கு செல்லாததால் இன்னும் இவருக்கு திருமணம் செய்து வைக்கவில்லை. இந்நிலையில், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு குடும்பத்தினரிடம் அடிக்கடி செல்வராஜ் கேட்டு வந்துள்ளார். ஆனால் வேலைக்கு செல்லாதவனுக்கு எவ்வாறு திருமணம் தேடுவது என எண்ணி குடும்பத்தினர் திருமணத்திற்கான முயற்சி எதையும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், இதற்காக நேற்று முன்தினம் இரவு தனது தந்தையிடம் தகராறு செய்த செல்வராஜ் அந்த பிரச்சனையில் அவரது தந்தை தலையில் கட்டையை வைத்து தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த மாடப்பன் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அவரது தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் செல்வராஜை கைது செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!
February 26, 2025
AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…
February 26, 2025
“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!
February 26, 2025