திராவிட மாடல் குறித்து சொன்னால் சிலருக்கு எரிச்சல், ஆத்திரம் வருகிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

தமிழகத்தில்  உள்ள மனிதநேயம் நாடு முழுவதும்  ஒரு மாடலாக உருவாகியுள்ளது என கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பேச்சு.

கொளத்தூரில் ரமலான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில்  உள்ள மனிதநேயம் நாடு முழுவதும்  ஒரு மாடலாக உருவாகியுள்ளது. இதுவும் ஒருவகையில் திராவிட மாடல்  தான். திராவிட மாடல் குறித்து சொன்னால் சிலருக்கு எரிச்சல், ஆத்திரம் வருகிறது. அனைவருக்கும் எல்லாம் சேர வேண்டும் என்பது தான் திமுகவின் லட்சியம், கொள்கை என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்