திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடக்கம்.!

Default Image

நாட்டிலேயே முதன் முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சென்னையில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.  தொடக்க விழாவில் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்ட முறைப்படி பெறப்படும். குப்பைகளை நவீன முறையில் மறுசுழற்சி செய்ய திட்டம். நீர் , நிலம் மாசுபடுவதைத் தவிர்க்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பெருங்குடி சோழிங்கநல்லூர் வளசரவாக்கம் தேனாம்பேட்டை கோடம்பாக்கம் உள்ளிட்ட ஏழு மண்டலங்களில் இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கப்படுகிறது. 7 மண்டலங்களில் 16,621 தெருக்களில் 8 ஆண்டுகளுக்கு இத்திட்டம் நடைமுறையில் இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்