சென்னை ஆவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான கனரக வாகன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த நீலம்சின்ஹா என்பவர் சில நாட்களாக மன உளைச்சலால் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையெடுத்து இன்று அதிகாலை பாதுகாப்பு வீரர்கள் தூங்கிக் கொண்டிருந்த அறையை நோக்கி நீலம்சின்ஹா துப்பாக்கியால் சரமாரி சுட்டார். இதில் தூங்கிக் கொண்டிருந்த இமாச்சல பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த கிரிஜெஷ் குமார் என்ற சக வீரர் மீது 6 குண்டுகள் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேலும் தனது துப்பாக்கியை கொண்டு மற்ற வீரர்களை சுடப் போவதாக மிரட்டினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்புத் துறை அதிகாரி துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு கூறினார்.
சரணடையவில்லை என்றால் சுட்டு தான் பிடிக்கப்படும் என கூற உடனடியாக துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு சரணடைந்தார். இறந்த கிரிஜெஷ் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அதிகாரிகள் நிலாம்பரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : பிரபல ரவுடி தூத்துக்குடியைச் சேர்ந்த ஐகோர்ட் மகாராஜா சென்னையில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். சென்னை கிண்டியில் பதுங்கியிருந்த…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 22) தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு…
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…