சூரிய மின்சக்தி பூங்கா – மின்வாரியம் அதிரடி உத்தரவு..!

Default Image

மாவட்டந்தோறும் சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்வதற்கான பணிகளைத் தொடங்க செயற்பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

திருவாரூர் மாவட்டத்தில் முதல் முறையாக சூரிய மின்சக்தி பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து இருந்த நிலையில், அதற்கான பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி  மாவட்டங்களின் மின் தேவையினை கணக்கெடுத்து அதற்கேற்ப அந்தந்த மாவட்டங்களிலேயே சூரிய மின்சக்தி பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மாவட்டந்தோறும் சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்வதற்கான பணிகளைத் தொடங்க செயற்பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்