சமூக ஆர்வலர் பெரியார் மணி, கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதி உதவி மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கர்ப்பிணி வேடம் அணிந்து வந்து மனு அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் பெரியார் மணி. சமூக ஆர்வலரான இவர் வித்தியாசமான வேடம் அணிந்து வந்து பல முறை கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த வகையில்,இன்று, கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதி உதவி மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கர்ப்பிணி வேடம் அணிந்து வந்து மனு அளித்துள்ளார்.
ஆட்சியரிடம் அவர் அளித்துள்ள மனுவில் அவர் கூறியிருப்பதாவது, தமிழகம் முழுவதும் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு முத்துலட்சுமி ரெடி அம்மையார் மகப்பேறு நிதியுதவித் திட்டம் பல மாதங்களாக வழங்காமல் நிலுவையில் உள்ளதாகவும், ஏழைப்பெண்களின் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன எனவே இந்தத் திட்டம் சரியாக பயன் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…