#breaking: டிராஃபிக் ராமசாமி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி…!

Published by
Edison

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிராஃபிக் ராமசாமி,சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே அங்கு வந்து போக்குவரத்தைச் சரி செய்வதை வழக்கமான பணியாகக் கொண்டிருந்தார்.இதனால்தான் ராமசாமிக்கு, டிராஃபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது.பொதுமக்கள் நலன் கருதி,பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து,அவ்வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடி பல நல்ல செயல்கள் செய்து வந்தார்.எனவே,இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவே எடுக்கப்பட்டுள்ளது.ராமசாமி அந்த அளவிற்கு சமூக பொதுநலனில் அக்கறைக் கொண்டவர்.

இதனையடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலில்,சோழிங்கநல்லூர் தொகுதியில் டிராஃபிக் ராமசாமி சுயேட்சையாக போட்டியிட்டார்.அதனால்,பிரச்சாரத்தில் முழுமையாக ஈடுபட்டு வந்த டிராபிக் ராமசாமிக்கு கடந்த ஏப்ரல் 4-ந்தேதி திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து,அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில்,இன்று உடல்நிலை இன்னும் மோசமானதன் காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ராமசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும்,கொரோனா பரிசோதனையும் டிராஃபிக் ராமசாமிக்கு மேற்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

Published by
Edison

Recent Posts

இன்று என்ன நாள் தெரியுமா? அண்ணா குறித்து நினைவுகளை பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இன்று என்ன நாள் தெரியுமா? அண்ணா குறித்து நினைவுகளை பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : 1967 ஆம் ஆண்டு தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு திருப்புமுனை நாளாக மாறியது. ஏனென்றால்,…

7 minutes ago

Live : முதலமைச்சரின் இந்தி திணிப்பு கண்டனம் முதல்.., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை…

சென்னை : நேற்று தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடத்திய பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இந்தி திணிப்பு…

1 hour ago

“இது தான் விதி”…திடீரென ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம்!

வங்கதேசம் :  அணியின் மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டர் முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2006…

1 hour ago

அனாவசியமான கேள்விகளை கேட்காதீர்கள்! ஏர்போர்ட்டில் கடிந்து கொண்ட இளையராஜா!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்படுகிறார். அங்கு ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு…

2 hours ago

தேன் கூட்டில் கை வைக்காதீர்கள்., மொழியால் பிரிந்த நாடுகள் இங்கு இருக்கிறது! மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி மொழி திணிப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை…

3 hours ago

“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதியில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளும்போது…

4 hours ago