அழிந்து வரும் உயிரினங்களை வேட்டையாட இந்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இதையும் மீறிபல்வேறு கடத்தல் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த கடத்தல்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்கி வருகிறது.இந்நிலையில் அயல்நாடுகளுக்கு கடத்துவதற்காக தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் நாகையில் பதுக்கி வைத்திருப்பதாக இராமநாதபுரம் மாவட்ட வனஅலுவலருக்கு தகவல் வந்தது. இதையடுத்து வனசரகர் அயூப்கான் தலைமையிலான குழுவினர் மற்றும் காவல்துறையினர் நாகை அக்கரைபேட்டை பகுதியில் நேற்று திடீரென அதிரடி ஆய்வு நடத்தினர். அதில் அக்கரைப்பேட்டை மாரியம்மன் கோயில் அருகே 1 டன் எடை கொண்ட பதப்படுத்திய கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டியை சேர்ந்த சந்திரசேகர்(45) மற்றும் நாகப்பட்டினம் கடற்கரை சாலையை சேர்ந்த செண்பகம்(60) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து அப்பகுதியில் நடத்திய சோதனையில், அக்கரைப்பேட்டை திடீர் குப்பம் பகுதியிலும் கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது, பதப்படுத்தாமல் 1 டன் எடை கொண்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். நாகப்பட்டினத்தில் 2 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் எடை கொண்ட கடல் அட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.3 கோடியாகும் என தெரிவித்துள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…