சிவகாசி சிறுமி வன்கொடுமை வழக்கு.! சிறுமியின் பெற்றோர் நேரில் ஆஜராக உத்தரவு .!

Published by
Dinasuvadu desk
  • சிவகாசி அருகே உள்ள கொங்களாபுரம் கிராமத்தை சார்ந்த கிருத்திகாவை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
  • கிருத்திகா பெற்றோர் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இதையெடுத்து வருகின்ற 26-ம் தேதி நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
கிருத்திகா என்ற சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கிருத்திகா பெற்றோர் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து வருகின்ற 26-ம் தேதி போக்சோ நீதிமன்றத்தில் கிருத்திகாவின் பெற்றோர் மற்றும் விசாரணை காவல் அதிகாரி ஆகியோர் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்களாபுரம் கிராமத்தை சார்ந்தவர் சுந்தரம். இவருக்கு 8 வயதில் கிருத்திகா என்ற மகள் இருந்தார்.இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்து உள்ளார். கடந்த மாதம்  20-ம் தேதி கிருத்திகா பள்ளி முடிந்து விட்டு மாலை வீடு திரும்பிய சிறுமி இயற்கை  உபாதைகள் கழித்துவிட்டு வருவதாக கூறி  சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கிருத்திகா வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையெடுத்து அடுத்த மருநாள் கிருத்திகா வீட்டின் அருகே உள்ள முட்புதரில் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…

3 hours ago

கருப்பு பெயிண்ட் அடிக்கிற முன்னாடி ஸ்கூல் போய் படிச்சிட்டு வாங்க…அண்ணாமலை பேச்சு!

சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…

3 hours ago

சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!

டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…

4 hours ago

AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!

ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான  சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…

6 hours ago

எடுத்தது ஒரு விக்கெட் எதுக்கு இந்த சீன்? அப்ரார் அகமதை விளாசிய வசீம் அக்ரம்!

துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…

6 hours ago

மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!

சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…

7 hours ago