திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கண்டரமாணிக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு திவ்யா என்ற மகளும் , ஸ்ரீ ராம் என்ற மகனும் உள்ளனர். செல்வம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மதியம் திவ்யா மற்றும் ஸ்ரீராம் இருவரும் அருகில் உள்ள திருமலை ராஜன் ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி விட்டன. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை நீண்ட நேரத்திற்குப் பிறகு மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தங்கள் மகள் மற்றும் மகன் இருவரும் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் கவிதா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை முயற்சி செய்தார் அவரை மீட்டு அருகில் இருந்தவர்கள் ஆறுதல் கூறினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…