அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில்,அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில்,அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில்,ஒற்றைத் தலைமை தீர்மானம் குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது.
இதனையடுத்து,ஓபிஎஸ் அணியினர் கடந்த 24-ஆம் தேதி டெல்லி விரைந்தனர்.அங்கு,பாஜக சார்பாக குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்மு அவர்களின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து,ஓபிஎஸ் தனது இரண்டு நாள் டெல்லி பயணத்தை முடித்து,நேற்று சென்னை திரும்பினார்.
இந்நிலையில்,தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும்,ஓபிஎஸ் சுற்றுப்பயணத்தின் அட்டவணை இன்று இறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.மாவட்ட வாரியாக நிர்வாகிகள் தொண்டர்களை சந்தித்து,அவர்களின் ஆதரவை திரட்டி,ஒற்றைத் தலைமை தீர்மானத்தை தடுக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகவும்,பொதுக்குழுவில் ஈபிஎஸ் தரப்பினர் தன்னை அவமானப்படுதியதை தொண்டர்களிடம் முறையிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.அதிமுகவில் தனது பலத்தை நிரூபிக்க தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார் என்று தெரிகிறது.
இதற்கிடையில்,அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சசிகலாவும் இன்று முதல் சுற்றப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.நாளுக்கு நாள் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இடையேயான மோதல் வலுத்து வரும் நிலையில்,சசிகலா இன்று முதல் தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும்,அதன்படி,இன்று காலை 11 மணி அளவில் திருத்தணி செல்லும் சசிகலா தொண்டர்களை சந்தித்து ஆதரவு கோர உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…