தந்தை- மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோவை சிபிசிஐடி போலீசார் அச்சுறுத்தியதன் காரணமாக நீக்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூரமான சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலக்கியுள்ளது. இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து பல அரசியல் பிரமுகர்களும், ரஜினி, கமல் உட்பட அனைத்து பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது இந்த விசாரணை சிபிசிஐடி போலீசாரிடமிருந்து சிபிஐ க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த கருத்து தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று மதுரைக்கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தந்தை மகள் விவகாரம் தொடர்பாக பல தகவல்களை வீடியோ மூலம் பாடகி சுசித்ரா வெளியிட்டிருந்தார். தற்போது அந்த வீடியோவை நீக்க கோரி சிபிசிஐடி அறிக்கை வெளியிட்டதை அடுத்து சுசித்ரா அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கியுள்ளார். ஆனாலும் பலர் அந்த வீடியோவை ஷேர் செய்து வரும் நிலையில் அனைவரும் அதை நீக்க வேண்டும் என்றும், அவை அனைத்தும் உண்மைகள் இல்லை என்றும், போலீசாருக்கு எதிராக தூண்டிவிடுவதாக உள்ளதாகவும், அதை பகிரவோ, நம்பவோ வேண்டாம் கூறி நீக்க வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுசித்ரா கூறியதாவது, தன்னை சிபிசிஐடி போலீசார் அழைத்து போலி செய்திகளை பரப்பியதற்காக கைது செய்யப்படுவீர்கள் என்று கூறி அச்சுறுத்தினார்கள். எனது வக்கீலின் ஆலோசனையின் படி வீடியோவை நீக்கினேன் அவர்கள் அதை கண்டிப்பாக செய்ய துணிபவர்கள். மக்கள் இந்த வழக்கை கவனியுங்கள், ஏனெனில் நிறைய மோசமான வேலைகள் நடந்து வருவதாக கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…