அக்டோபர் 15-க்குள் சிங்கார சென்னை 2.0.! சென்னை மேயர் அதிரடி அறிவிப்பு.!

Default Image

அக்.15க்குள் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் மேற்கொள்ளப்படும் மழை நீர் வடிகால் இணைப்பு பணிகள் முடிக்கப்படும் என சென்னை மேயர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் இந்த மாத இறுதியில் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழக அரசு பருவமழையின் போது பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறுகையில், அக்.15க்குள் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் மேற்கொள்ளப்படும் மழை நீர் வடிகால் இணைப்பு பணிகள் முடிக்கப்படும்.

95% மழை நீர் வடிகால் பணி நிறைவு பெற்றுள்ளது. சிந்தாதிரிபப்பேட்டையில் 10,000 பேருக்கு உணவு வழங்கும் வகையில் உணவுக்கூடம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மண்டல வாரியாக உணவு கூடங்கள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்