இ-பாஸ் முறை எளிதாக்கப்பட்டதால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகன எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு முன்பு அறிவித்தது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். உண்மையான காரணங்கள் கூறிய பின்னரும் இ-பாஸ் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் பல எழுந்ததை அடுத்து, ஆதார் கார்டு, குடும்ப அட்டை ஆகியவற்றை காட்டி இ-பாஸ் எளிதாக வாங்கலாம் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி, கடந்த திங்கட்கிழமை மட்டும் மட்டும் ஒரே நாளில் 1.20லட்சம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. தற்போது இ-பாஸ் முறை எளிமையாக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் வாகனங்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் நெல்லையின் மாவட்ட எல்லையான கங்கை கொண்டானில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இ-பாஸ் பெற்று தான் வாகனங்கள் வருகிறதா என்று சோதனை செய்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. இபாஸ் முறை எளிதாக்கப்படுவதற்கு முன்பு ஒரு நாளில் 100 வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது 300 வாகனங்களாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…