இபாஸ் முறை எளிதாக்கப்பட்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக ரயில்கள், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் ஜூலையில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை ஆறாயிரமாக இருந்த நிலையில் தற்போது ஏழாயிரமாக அதிகரித்துள்ளது. ஏனெனில் இபாஸ் முறை தமிழகத்தில் எளிதாக்கப்பட்டதை அடுத்து ஒரு நாளில் மட்டும் வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை ஐம்பதில் இருந்து எண்பதாக அதிகரித்துள்ளது அதிலும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி 81 விமானங்கள் இயக்கப்பட்டு 8,067 பேர் பயணம் செய்துள்ளதாகவும், அதில் பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் 4,617 பேர், சென்னையிலிருந்து புறப்பட்டு பிற இடத்திற்கு சென்றவர்கள் 3,450 பேர் என்று கூறப்படுகிறது. இபாஸ் முறையாக எளிதாக்கப்பட்டதால் இனி வரும் தினங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…