தமிழக டிஜிபி திரிபாதி வரும் 30-ம் தேதி நாளையுடன் ஒய்வு பெறும் நிலையில், தமிழகத்தின் சட்டம் & ஒழுங்கு புதிய டிஜிபி யாக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் 29-வது சட்ட ஒழுங்கு டிஜிபி-யான திரிபாதி அவர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அவர் வரும் 30ஆம் தேதி நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து, தமிழகத்தின் 30-வது டிஜிபி யார் என்பதை தேர்வு செய்ய, மத்திய தேர்வாணைய குழுவும், உள்துறை அமைச்சகமும் கடந்த 28-ம் தேதி ஆலோசனை நடத்தியது.
அதனைத் தொடர்ந்து, சீனியாரிட்டி அடிப்படையில்தான் டிஜிபி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால்,தமிழக டிஜிபியாக நியமனம் செய்ய 3 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) மாநில அரசுக்கு பரிந்துறை செய்தது.
இந்த பட்டியலில் 1987 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான ரயில்வே துறை டி.ஜி.பி-யாகப் பணியாற்றி வரும் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நாளையுடன் தமிழக டிஜிபி திரிபாதி ஓய்வு பெறயிருக்கும் நிலையில் தமிழகத்தின் 30 வது சட்டம் & ஒழுங்கு டிஜிபி யாக தமிழகத்தை சேர்ந்த சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் பொறுப்பேற்க உள்ளார்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…