நெல்லை மாவட்டம் களக்காடு அருகே நீராவி முருகன் என்ற ரவுடி காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவரை திண்டுக்கல் தனிப்படை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியிருந்தது.
வழிப்பறி,கொள்ளை வழக்கு:
தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் மீது 3 கொலை வழக்கு மற்றும் கடத்தல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக,திண்டுக்கல் மாவட்டத்தில் அவர்மீது வழிப்பறி,கொள்ளை வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
தப்ப முயற்சி:
இதனையடுத்து,அவரை கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட எஸ்.ஐ இசக்கிராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் நெல்லையில் முயற்சித்தபோது காவலர்களை தாக்கிவிட்டு அவர் தப்பிச்செல்ல முயன்றதால் இந்த என்கவுண்டர் நடந்ததாகவும்,மாறாக திட்டமிட்டு இது நடத்தப்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எஸ்.ஐ-க்கு அரிவாள் வெட்டு:
இந்நிலையில்,நீராவி முருகனை பிடிக்க சென்றபோது பழனி எஸ்.ஐ இசக்கிராஜா உட்பட 3 காவலர்களுக்கு அரிவாள் வெட்டு என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாகநெல்லை எஸ்.பி சரவணன் கூறுகையில்:நீராவி முருகனை பிடிக்க திண்டுக்கல் மாவட்டம் தனிப்படை போலீசார் நெல்லை சென்றிருந்தனர்.இந்த நிலையில்,நீராவி முருகனை பிடிக்க முயன்றபோது அவர் அரிவாளால் 3 காவலர்களை தாக்கியதன் காரணமாக,தற்காப்புக்காக முருகனை ஒரு முறை சுட்டதாகவும்,ரவுடி முருகன் தாக்கியதில் நான்கு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நீராவி முருகன் மீது பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…