#Breaking:எஸ்.ஐ-க்கு அரிவாள் வெட்டு – சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி நீராவி முருகன்!

Published by
Edison

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே நீராவி முருகன் என்ற ரவுடி காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவரை திண்டுக்கல் தனிப்படை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியிருந்தது.

வழிப்பறி,கொள்ளை வழக்கு:

தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் மீது 3 கொலை வழக்கு மற்றும் கடத்தல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக,திண்டுக்கல் மாவட்டத்தில் அவர்மீது வழிப்பறி,கொள்ளை வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

தப்ப முயற்சி:

இதனையடுத்து,அவரை கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட எஸ்.ஐ இசக்கிராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் நெல்லையில் முயற்சித்தபோது காவலர்களை தாக்கிவிட்டு அவர் தப்பிச்செல்ல முயன்றதால் இந்த என்கவுண்டர் நடந்ததாகவும்,மாறாக திட்டமிட்டு இது நடத்தப்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எஸ்.ஐ-க்கு அரிவாள் வெட்டு:

இந்நிலையில்,நீராவி முருகனை பிடிக்க சென்றபோது பழனி எஸ்.ஐ இசக்கிராஜா உட்பட 3 காவலர்களுக்கு அரிவாள் வெட்டு என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாகநெல்லை எஸ்.பி சரவணன் கூறுகையில்:நீராவி முருகனை பிடிக்க திண்டுக்கல் மாவட்டம் தனிப்படை போலீசார் நெல்லை சென்றிருந்தனர்.இந்த நிலையில்,நீராவி முருகனை பிடிக்க முயன்றபோது அவர் அரிவாளால் 3 காவலர்களை  தாக்கியதன் காரணமாக,தற்காப்புக்காக முருகனை ஒரு முறை சுட்டதாகவும்,ரவுடி முருகன் தாக்கியதில் நான்கு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நீராவி முருகன் மீது பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

4 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

5 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

5 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago