கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் வாக்குமூலமும் கொடுத்துவிட்டனர். இந்நிலையில் தற்போது, இதில் இறந்த வில்சன் அவர்களின் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த ரூ.5 லட்சம் ரூபாயை அவரது மனைவி ஏஞ்சல் மேரியிடம் வழங்கப்பட்டது.ஏற்கனவே தமிழக அரசு சார்பில் ஒரு கோடிரூபாய் நிதியுதவி தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கடந்த ஜனவரி 8ம் தேதி புதன் கிழமை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் தாக்கியும் கொடூரமாக கொலை செய்தனர்.இந்த கொலை வழக்கில் கைதான தவுபிக், சமீம் மீது உபா சட்டம் போடப்பட்டுள்ளது. இவர்கள் தற்கொலைபடை தீவிரவாதிகள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…