நாகை மாவட்டம் மயிலாடுதுறை சார்ந்தவர் கனிமொழி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இவர் தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாகை மாவட்டம் திட்டச்சேரி உதவி ஆய்வாளராக வேலைசெய்து வருபவர் விவேக் ரவிராஜ்.இருவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தது மூலம் அப்பெண் கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதை அறிந்த விவேக் அப்பெண்ணிடம் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்வதாக கூறி கருவை கலைக்க வற்புறுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் இருவரும் சென்று கருவை கலைத்தனர். பிறகு அப்பெண்ணிடம் பேசுவதை விவேக் குறைத்துள்ளார். சந்தேகம் அடைந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த காவல் அதிகாரி விவேக் கொச்சை வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் நடந்ததை வெளியில் கூறினால் குடும்பத்துடன் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இது தொடர்பான ஆடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விவேக் மிரட்டல் தொடர்பாக அப்பெண் நாகை மற்றும் சென்னை காவல்துறை அலுவலகங்களில் புகார் அளித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த விவேக் மயிலாடுதுறையில் உள்ள அரசியல் வாதிகள் மற்றும் சில ரவுடிகளை அனுப்பி வைத்து புகாரை வாபஸ் பெற வேண்டும் என கொலை மிரட்டல் விடுத்ததாக அப்பெண் கூறியுள்ளார்.
தன்னை காதலித்து ஏமாற்றியதும், சட்டவிரோதமாக கருவை கலைத்தது , கொலை மிரட்டல் அனைத்து விதமான ஆதாரங்கள் இருந்தும் உதவி ஆய்வாளர் மீது காவல் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பெண் கூறுகிறார்.
கொல்கத்தா : ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…
சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…