பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்ஐ கைது…!

Default Image

நீலகிரி மாவட்டம் மேல் குன்னூர் காவல் நிலையத்தை சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறப்பு காவல் ஆய்வாளர் கைது. 

நீலகிரி மாவட்டம் மேல் குன்னூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக சரவணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே காவல் நிலையத்தில் சேர்ந்த பெண் காவல் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்த பெண் காவலர் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இதனை எடுத்து சரவணன் மஞ்சசூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் சரவணன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போதாது என பெண் காவலர் வலியுறுத்தியதை அடுத்து, மேல் குன்னூர் போலீசார் சரவணன் மீது வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்