சென்னையில் துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்ஐ கைது.
இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் இன்று பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் சென்னையில் மாதாவரம் காவல் நிலையத்தின், காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
சிறுமியின் தந்தை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து எஸ்ஐ சதீஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், இவரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், எஸ்.ஐ சதீஷ்க்கு சிறுமியின் தாயான ரேவதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் காரணமாக தான் அவர் ரேவதியின் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சிறுமியின் தாய் ரேவதி மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் பெரியம்மா இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…