இரண்டாம் அலைக்கு காரணமாகிவிடக்கூடாது – மு.க.ஸ்டாலின்

Default Image

“புயல்-மழைச் சூழல் கொரோனா தொற்றின் இரண்டாம் அலைக்கு காரணமாகிவிடக்கூடாது” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் இன்றுஇரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆகவே  சென்னை பெரம்பூரில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை பார்வையிட்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னையில் ‘நிவர்’ புயல் காரணமாக நீர் சூழ்ந்த இடங்களுக்குச் சென்றேன்; உதவிகளையும் வழங்கினேன்.சூழல் மிரட்டுகிறது,அதிகாரிகளுக்கு ஒத்துழைப்போம்.முதலில், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து தேவையான உதவிகளைச் செய்வோம் என்பதை மனதில் கொண்டு களமிறங்குவோம்; மக்களைக் காப்போம்.“புயல்-மழைச் சூழல் கொரோனா தொற்றின் இரண்டாம் அலைக்கு காரணமாகிவிடக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY
Sofiya Qureshi
Vyomika Singh