மே 1 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில், மே தின நினைவு சின்னத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். குறிப்பாக தொழிலாளர்களின் உழைப்பை போற்றும் வகையில் முதல்வர் உட்பட நூற்றுக்கணக்கானோர் சிவப்பு நிற ஆடை அணிந்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து,மே தின உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பின்னர் முதல்வர் கூறியதாவது:”கட்டுமான தொழிலாளர்களின் திருமண உதவித்தொகை இதுவரை ஆண்களுக்கு ரூ.3000 மற்றும் பெண்களுக்கு ரூ.5000 ஆக இருந்த நிலையில்,இனி தொடர்ந்து அனைவருக்கும் ரூ.20,000 திருமண உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருக்கிறோம், அமைப்பு சாரா தொழிலாளர்களின் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய குழந்தைகளுக்கு ரூ.1000 வழங்கக் கூடிய திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது ” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும்,தொழிலாளர்களை வாழ்த்தக்கூடிய அரசு மட்டுமல்ல, வாழ வைக்கக்கூடிய அரசு திமுக அரசுதான்,அந்த வகையில்,இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது திமுக அரசுதான் என்றும்,பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…
சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.…
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் இரண்டு அணிகளும் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின்…