தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி முதல் காய்கறி, மளிகை முதல் கடைகள் திறக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் குறையாத நிலையில் மே 24 முதல் 31 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்னர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதால் மே 31 ஆம் தேதியிலிருந்து ஜூன் 7 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு உடனான ஆலோசனைக்கு பின் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளரை சந்தித்தார். அப்போது, வரும் 7 ஆம் தேதி காலை போது ஊரடங்கு முடிவுக்கு வருவதால் கொரோனா குறைவாக உள்ள மாவட்டங்களில் கடைகளை திறக்க அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தபோது காலை 6 மணி முதல் 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால்,இந்த முறை கடைகள் திறக்கப்பட்டால் காலை 6 மணி முதல் 10 மணி என்பதை மேலும் சில மணி நேரம் அதிகரிக்க வேண்டும் என்று தலைமைச் செயலரிடம் கோரிக்கையை வைத்ததாக அவர் தெரிவித்தார்.
7 ஆம் தேதி ஊரடங்கு முடிவதால் அடுத்த கட்டமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்தார்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…