அதிர்ச்சி சம்பவம்.! தாயுடன் போண்டா சாப்பிடும் போது உயிரிழந்த பெண்.!

Default Image
  • சென்னையில் பெண் ஒருவர் போண்டா சாப்பிடும் பொது திடீரென தொண்டையில் போண்டா சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
  • பின்னர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

சென்னை சூளைமேடு காமராஜர் நகரைச் சேர்ந்த கங்காதரன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பத்மாவதி, அங்குள்ள கடையில் போண்டா வாங்கி வீட்டிற்கு வந்து அவரது தாயுடன் சாப்பிட்டுள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக பத்மாவதி போண்டா சாப்பிடும் போது திடீரென தொண்டையில் சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் உடனடியாக அங்குள்ளவர்கள் 108-க்கு கால் செய்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றுள்ளனர்.

அதை தொடர்ந்து பத்மாவதியை மருத்துவமனையில் சோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இது குறித்து சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களிடையே இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay
gold price
Tamilisai Soundararajan Selvaperunthagai
rain update