#Shocking:தமிழகத்தில் 3 மாதங்களுக்குப் பிறகு முதல் பலி;பாதுகாப்பாக இருங்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவுரை!

Published by
Edison

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,நேற்று 476 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் 221 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தது.ஆனால்,தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில்,தமிழகத்தில்தான் கொரோனா பரவல் குறைவாக பரவுகிறது எனவும் எனினும் பொதுமக்கள் அனைவரும் மிகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

“உலகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வரும் நிலையில்,தமிழகத்தில்தான் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைவாக பரவுகிறது.எனினும்,முதல்வரின் அறிவுறுத்தலின் படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குறிப்பாக,கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் பரிசோதனைகள் அதிகரிக்கப்படும்”,என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து,பேசிய அமைச்சர்:”கடந்த 3 மாதங்களாக தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு ஏதும் இல்லாமல் இருந்து வந்த நிலையில்,நேற்று தஞ்சை சேர்ந்த 18 வயது இளம் பெண் உயிரிழந்துள்ளார்.எனவே,பொதுமக்கள் அனைவரும் மிகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்றும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் சமூக இடைவெளி,முகக்கவசம் அணியுமாறும் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக,கொரோனா 2-வது தவணை தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள வேண்டும் என்றும்,காய்ச்சல்,சளி உள்ளிட்ட எந்த அறிகுறி இருந்தாலும் உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

3 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

3 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

4 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

4 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

4 hours ago