அதிர்ச்சி : இறந்தவருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதாக வந்த குறுஞ்செய்தி..!

Published by
லீனா

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை  அடுத்த வில்வ மரத்துபட்டியை சேர்ந்த ராஜப்பா என்பவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும்  தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை  அடுத்த வில்வ மரத்துபட்டியை சேர்ந்தவர் ராஜப்பா. இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து இவருக்கு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த தேதி குறிப்பிட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி அவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு அடுத்த தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான தேதி வந்ததையடுத்து, சுகாதார ஊழியர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை அழைத்த  நிலையில், அவரது குடும்பத்தினர் ராஜப்பா உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி ராஜப்பாவுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அவர் பேரிலோவன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து அவருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக குருஜிச்செய்தி வந்ததையடுத்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Recent Posts

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

4 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

52 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

1 hour ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

2 hours ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago