அதிர்ச்சி : 2 மாதத்திற்கு முன் இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக வந்த குறுஞ்செய்தி..!

சங்கரன்கோவில் அருகே 2 மாதத்திற்கு முன் இருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியால் குடும்பத்தினர் அதிர்ச்சி.
தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சங்கரன்கோவில், தென்காசி அருகே கூலித்தொழிலாளியான மாரியப்பன் கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி முதல்தவனை தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இந்த கடந்த அக்.8-ஆம் தேதி அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து, நேற்று மாரியப்பனின் மகன் மாரிச்செல்வத்தின் தொலைபேசிக்கு அவரது தந்தை 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியை, அவர் 2-வது தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சான்றிதழ் இருந்தது அவரது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025