அதிர்ச்சி : கேம் பிரியர்கள் கவனத்திற்கு..! பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை…! நடந்தது என்ன?

Default Image

புதுச்சேரியை அடுத்த மங்களம் கிழக்கு தெருவை சேர்ந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை. 

இன்றைய இளைஞர்கள் பலரும், செல்போன்கள், மடிக்கணினிகள் போன்றவற்றின் மூலம் கேம் விளையாடி, தங்களது நேரத்தை கழிப்பதுண்டு. இதனால், ஏற்படும் தோல்விகளை பொறுத்துக்கொள்ள முடியாமல், சிலர் தங்களது உயிரை மாய்த்துக் கொள்வதும் சமீப நாட்களாக வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில், புதுச்சேரியை அடுத்த மங்களம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சந்திர சேகர்.  இவரது 22 வயது மகன் தீபக். இவர் கொரோனா ஊரடங்கால், செல்போன் மற்றும் கம்பியூட்டர்களில் கேம் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார். இதற்காக தனது அறையில் பல்வேறு வசதிகளை செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில், கேம் விளையாடுவதில் மட்டுமர் முழுக்கவனம் செலுத்தி வந்த அவர், திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அவர் கடந்த சில நாட்களாக மனஅழுத்ததில் இருந்தது தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்