17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார்.
தஞ்சாவூர் மாவட்டம் மனொலிப்பெட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் மகள் 17 வயது சிறுமி. இவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். சமீபகாலமாக அவரது உடல்நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பெற்றோர்கள் சிறுமியை தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை அடுத்து சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக மகளிர் போலீசாருக்கு மருத்துவர்கள் உடனடியாக தகவல் அளித்தனர்.
தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்த போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பக்கத்து வீட்டில் உள்ள 12 வயது சிறுவன் தான் இதற்கு காரணம் என்றும், தன்னுடன் நெருக்கமாக பழகியதால் தான் கர்ப்பமானதாகும் அந்த சிறுமி கூறினார். இதைக்கேட்டு மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பிறகு சிறுமியின் பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுவர்கள் பழகியது பற்றி தங்களுக்கு தெரியாமல் மறைத்து விட்டதாகவும், தனது மகள் கர்ப்பமாக இருப்பதை தங்களுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் தெரியும் என்றும் பிரசவ வலி வந்ததால் தான் மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட 12 வயது சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்பு நீதிபதி முன்பாக ஆஜர்படுத்திய நிலையில், காவல்துறை சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சிறுவனை சீர்திருத்தப்பள்ளிக்கு தற்போது அனுப்பி வைத்துள்ளனர்
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…