மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.! தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியை மீது வழக்கு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • கடந்த நாட்கள் முன்பாக கோவையில் 11-ஆம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் பிறப்பு உறுப்பை பிடித்து இழுத்து துன்புறுத்தியதாக கூறப்பட்டது.
  • தற்போது 2 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாக 3 ஆசிரியைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன் கோவை மாவட்டம் சூலூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன். இவர் தினமும் வகுப்பறையில் சேட்டை செய்ததாகவும், பள்ளிக்கு செல்போனை எடுத்து வந்து, பாடத்தைக் கவனிக்காமல் செல்போனில் கவனம் செலுத்திதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து ஆசிரியர்கள் பலமுறை கண்டித்தும் மாணவர் அடங்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் கூடி மற்ற மாணவர்களை வகுப்பறையில் இருந்து வெளியேற்றி விட்டு கதவை இழுத்து மூடிவிட்டு அந்த மாணவரை பிறப்பு உறுப்பை பிடித்து இழுத்து துன்புறுத்தியதாக வெளியான அந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது.

தற்போது அதே கோவை அருகே 2 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாக தலைமை ஆசிரியர் மற்றும் 3 ஆசிரியைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கேந்திரிய வித்யாலயா தலைமை ஆசிரியர் மேகநாதன், ஆசிரியைகள் திவ்யா, தமிழரசி, அருணா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளில் 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இது போன்று சம்பவம் ஏற்படுவதால் கோவை மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

7 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

9 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

9 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

11 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

13 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

13 hours ago