#BREAKING: பாலியல் தொல்லை.., மேலும் 3 பள்ளிகளுக்கு சம்மன்..!

Default Image

ஆசிரியர்கள் மீது மாணவர்கள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக மேலும் 3 பள்ளிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு உள்ளாவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த புகாரை தொடர்ந்து, சென்னையில் PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், பல ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவை அனைத்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் நேற்று நீதிபதி மகாராஜன் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி வரை கெபிரஜை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மேலும் மூன்று பள்ளிகளுக்கு குழந்தைகள் மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஆசிரியர்கள் மீது மாணவர்கள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக  அடையாறு கேந்திரய வித்யாலயா, கேளம்பாக்கம் சுஷில் இண்டர்நேஷனல் பள்ளி மற்றும் நாமக்கல்லில் உள்ள பள்ளி ஒன்றுக்கும் ஆசிரியர்கள் மீதான புகார்கள் பற்றி விளக்கம் தர சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை செனாய் நகர் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்