கடலூர் மாவட்டம் வடலூரில் 149-வது தைப்பூச ஜோதி தரிசன விழா முன்னிட்டு வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூச தினத்தில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் வள்ளலார். இவர் கடவுள் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உணர்த்தும் வகையில் வடலூர் சத்திய ஞான சபையை வள்ளலார் நிறுவினார். இதைத்தொடர்ந்து ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபை அருகிலேயே தர்மசாலையை தொடங்கி வைத்தார். அது அன்று முதல் இன்று வரை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் வள்ளலார் மேட்டுக்குப்பத்தில் சித்திபெற்றார். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழாவாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படும்.
இந்நிலையில், நேற்று ஜோதி தரிசனம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. அதைத்தொடந்து இன்று காலை முதல்கால ஜோதி தரிசனம் தொடங்கியது. அதில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. அப்போது அதிகாலையிலேயே காத்திருந்த ஏராளமான பக்தர்கள், அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்ற மகா மந்திரத்தை முழங்கி ஜோதி தரிசனம் செய்தனர். பிற்பகல் 1 மணிக்கும் தொடர்ந்து இரவு 7 மணிக்கும், 10 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது. இதையடுத்து நாளை அதிகாலையில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
இந்த தை பூசத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஏரளமான பக்தர்கள், சித்தர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். பின்னர் விழாவை முன்னிட்டு வடலூர் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜோதி தரிசனத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மார்க் மற்றும் அசைவ கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…