வானதி சீனிவாசன் உட்பட ஏழு பாஜகவினர் விடுதலை..!

Default Image

2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ஆதிநாராயணன் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் வானதி சீனிவாசன் உட்பட ஏழு பாஜகவினர் விடுதலை.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் போது கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் அம்மன் அர்ஜூனன் போட்டியிட்டார்.  அப்போது இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பாஜகவினர் தன்னை தாக்கியதாக கூறி அதிமுகவை சேர்ந்த ஆதிநாராயணன் வானதி சீனிவாசன் உட்பட 7 பேர் மீது புகார் அளித்தார்.

இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த வழக்கு கோவை 5 வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன், கண்மணி பாபு, மோகனா, குணசேகரன், நாகராஜ், சண்முகசுந்தரம் மற்றும் பாபு  ஆகிய 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Free bus for men - Minister Sivasankar says
Rajat Patidar fined
Governor RN Ravi - Supreme court of India - TN CM MK Stalin
AA22xA6
mk stalin - RN RAVI