தமிழகத்தில் இன்று முதல் மாநிலங்களுக்குளான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க தொடங்கியது.
தமிழகத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, தமிழகத்திற்குள் பயணிப்போருக்கு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து, முதலில் மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, ஐந்து மாதத்திற்கு பிறகு பேருந்து சேவைகள் தொடங்கியது. சென்னையில் பெரு நகர பேருந்து போக்குவரத்து சேவையும் தொடங்கப்பட்டது. இதையடுத்து, மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவைக்கு அனுமதி அளித்து தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், அரசு அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் இன்று முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கிடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 1,184 அரசு விரைவு பேருந்துகள் உள்ளனர்.
இதில் முதல் கட்டமாக 524 அரசு விரைவு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படவுள்ளது. இந்த விரைவு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு, 4 ஆம் தேதி முதல் தொடங்கியது. பேருந்து சேவைகள் தொடங்கவுள்ள நிலையில், விரைவு போக்குவரத்துக்கு கழகம் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு அறிவுரைகள் வழங்கியது.
அதில், கடந்த ஐந்து மாதங்களாக இரவில் ஓய்வில் இருந்ததால் இரவு நேரங்களில் பேருந்துகளை ஓட்டுநர்கள் கவனமாக இயக்க வேண்டும் எனவும், நள்ளிரவு- காலை 04.00 மணி வரை நடத்துனர்கள் இருக்கையில் அமர்ந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வழித்தடங்களில் இரு சக்கர வாகனங்கள் அதிகம் இயக்கப்படுவதால் கவனமாக பணிபுரிய வேண்டும். நகரில் போக்குவரத்து நெரிசல், வேகத்தடை அதிகம் இருப்பதால் ஓட்டுநர்கள் கவனமுடன் பணிபுரிய வேண்டும் போன்ற சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும்.…
சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…
ஆப்கானிஸ்தான் : அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…
சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…
சென்னை : தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மாய்ந்த திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோரின்…
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…