செந்தில்பாலாஜி கட்சி மாறியதை பத்தோடு பதினொன்றாகத்தான் பார்க்கிறேன் …!அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

Default Image

செந்தில்பாலாஜி கட்சி மாறியதை பத்தோடு பதினொன்றாகத்தான் பார்க்கிறேன் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் ஏற்றப்பட்டது. இதையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர் ஆவர்.
 
நேற்று முன்தினம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக  அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,செந்தில்பாலாஜி கட்சி மாறியதை பத்தோடு பதினொன்றாகத்தான் பார்க்கிறேன். திராவிடக் கட்சிகளால் தமிழகத்தில் வளர்ச்சி இல்லை என பாஜக கூறுவது அக்கப்போரான குற்றச்சாட்டு என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  தெரிவித்துள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்