Senthil balaji - ED [File Image]
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று காலை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் இல்லை, அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என உத்தரவிட்டு மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
அதுமட்டுமில்லாமல், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து, வரும் 12ம் தேதி வரை விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று காலை அனுமதி வழங்கிய நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது.
செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி சற்று நேரத்தில் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க உள்ளார். அமலாக்கத்துறை காவலில் கோரிய வழக்கில் சிறையில் இருந்து செந்தில் பாலாஜியை காணொளி வாயிலாக ஆஜர்படுத்த வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…