MInister Senthil balaji [File Image]
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ரத்து செய்யும் கோரிக்கையானது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
அமலக்கத்துறையால் கடந்த 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அப்போது ஜூன் 28வரையில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அவர் அப்போதே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
இதற்கிடையில், அமலாக்கத்துறையினர், தாங்கள் செந்தில் பாலாஜியை விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இருந்தனர். ஆனால், அவருடைய உடல்நிலை விசாரணைக்கு ஒத்துழைக்காததால், மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த காரணத்தால் விசாரணைக்கு எடுக்க முடியவில்லை என அமலாக்கத்துறையினர் கடந்த சனிக்கிழமை நீதிமன்றத்தில் கூறியிருந்தனர். நீதிமன்ற காவல் நாளை முடியும் காரணத்தால் அவர் நாளை காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி வழக்கு தொடர்ந்து இருந்தார். ஏற்கனவே இந்த வழக்கின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உள்ளார்.
அந்த பிரமாண பத்திரத்தில், சட்டவிரோதமாக தனது கணவர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருந்தார். இன்று இந்த நீதிமன்ற காவல் ரத்து தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இதில் அவருக்கு நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது நீக்கப்படுமா என்பது தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…