Minister Senthil balaji [File Image]
பிற்பகல் 3.30க்கு செந்தில் பாலாஜி மீதான ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது .
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறை நிர்வாக கட்டுப்பாட்டில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தீவிர இதய சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி அமைச்சர் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 3.30க்கு நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல, அமைச்சர் செந்தில் பாலாஜியை தங்கள் தரப்பு விசாரணைக்கு அழைத்து செல்ல அனுமதி கோரி அமலாக்கத்துறையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. முன்னதாக நீதிமன்ற காவலை ரத்து செய்ய கோரிய செந்தில் பாலாஜி தரப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன்…
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…